Monday 26 March 2012

108 திவ்விய தேசங்கள்

திருமால் ஆலயங்கள் - 108 திவ்விய தேசங்கள்
அருள்மிகு ஊர் மாவட்டம்
இமையவரப்பன் திருச்சிற்றாறு ஆழப்புழா
மாயப்பிரான் திருப்புலியூர் ஆழப்புழா
பாம்பணையப்பன் திருவண்வண்டூர் ஆழப்புழா
ஆதிஜெகநாதப் பெருமாள் திருப்புல்லாணி இராமநாதபுரம்
நைமிசாரண்யம் பெருமாள் நைமிசாரண்யம் உத்தர பிரதேசம்
பத்ரிநாத் கோவில் பத்ரிநாத் உத்தராகண்ட்
ரகுநாத் மந்திர் திருக்கண்டங்கடிநகர் உத்ராஞ்சல்
பரமபுருஷன் திருப்ரிதி உத்ராஞ்சல்

கோபம் குறைய

அன்பினால் நாமும், நம்மைச் சுற்றியுள்ள எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம். அன்பே சிவமாக அமர்ந்திருக்க ஆசைப்படுவோம். கோபப்படுவதால் எதிராளிக்குக் கோபம் வளருமே ஒழிய, குறைய வாய்ப்பில்லை. அன்பாக இருப்பது தான் நம்முடைய சுபாவமான தர்மம். அதுதான் ஆனந்தம் தரவல்லது. கோபத்தால் நமக்கு நாமே தீங்கு செய்கிறோம். அது நல்வழியிலிருந்து நம்மை திசை திருப்பி, அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும். எனவே கோபத்தை தவிர்ப்பது நல்லது.”
- காஞ்சிப் பெரியவரோட அருள்வாக்கு
கோபம், பாபம், சண்டாளம் என்பர் பெரியோர்

Tuesday 20 March 2012

மரணம் இல்லா வாழ்வுக்கு வழி

அருணகிரியாரைப் போல நாமும் மரணம் இல்லாப்  பெரு வாழ்வு வாழலாம், வீணாகப் பயனின்றிக் காலத்தைக் கொன்றால் காலன் நம்மைக் கொன்றுவிடுவான், காலத்தைக் கொல்லாமல் பயன்படுத்திக் கொண்டால் காலனைக் கொன்றுவிடலாம், காலத்தை வீணாக்காமல் இறைவனோடு தொடர்புடைய நல்ல விஷயங்களைச் சொல்வதைக் காலஷேபம் எனச் சொல்வது வழக்கம், நம்முடைய எண்ணங்களை எல்லாம் ஆண்டவன்பால் செலுத்தி வாழ்ந்தால் காலம் போய்க் கொண்டிருக்கும். ஆனால் போவது தெரியாது. நெடுந்தூரம் பிரயாணம் செய்கிறவன் ரெயில் வண்டியில் ஏறிப் படுத்துக் கொண்டு விடுகிறான், காலையில் எழுந்து பார்த்தால் முந்நூறு மைல் பிரயாணம் செய்திருப்பது தெரிகிறது. அவனுக்கே தெரியாமல் முந்நூறு மைல்கள் போய் விடுகின்றன. விழித்துக் கொண்டே இருந்தான் என்றால் கொஞ்ச தூரம் பல பல காட்சிகளைப் பார்த்து வருவான், கண்ணில் கரித்துண்டு விழும்; கசக்கிக் கொள்வான். கண் மிக வெப்பமாக இருக்கும். "இன்னும் பத்து மைல்கூடப் போகவில்லையா ?" என்று கவலைப்படுவான்.தூங்குகிறவனுக்கோ தூரம் போவது தெரிவதில்லை.

          வாழ்க்கையில் நாம் எத்தனை காலம் வாழ வேண்டும் என்ற வரையறை இருக்கிறதோ அதுவரையில் தூங்க வேண்டும், தூங்குவதாவது, மனம் இறைவன் அடியில் ஒருமைப்பட்டு இருத்தல். வேலும் மயிலும் துணை என்று நினைத்து, கிண்கிணி முகுள சரணங்களில், க்ருபாகரனுடைய, ஞானாகரனுடைய, சுர பாஸ்கரனுடைய பாதங்களில் உறங்கினால் காலம் போவது தெரியாது. காலனைக் கொன்றுவிடலாம். வாழ்க்கையில் ஏற்படுகிற தாபம் நம்மை அண்டாது. காலம் போய்கொண்டே இருந்தாலும் நம்மளவில் நின்றுவிட்டது போல ஆகும். அதன் முடிவு கால ஜயம், அதனால் பெறுவது மரணமில்லாப் பெருவாழ்வு.
                       


Monday 5 March 2012

சுவாமிக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

சுவாமிக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள். வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.

ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நாம் ஒரு தொழிலாளி

* இறைவனே உலகம் என்ற நம்பிக்கை உறுதியாக உண்டானால்
    எல்லா பிரச்னைகளும் ஒழிந்து தீர்வு பெற்று விடுவீர்கள்.

* எவன் இறைவனைக் காண வேண்டும் என்று ஏங்கி அழுகிறானோ
  அவன் மீது இறைவனின் கருணை விழத் தொடங்கும்.

* உலக இன்பங்களில் மயங்கித் திரிபவன் இந்த பிறவியில் மட்டுமல்ல,
   எந்தப் பிறவியிலும் இறைவனை அடைய முடியாது.

* பணத்தின் மீது கொள்ளும் மோகம் மனிதனைப் பைத்தியமாக்கிவிடும்.
   காமம் மனிதனை இறைவனிடமிருந்து பிரித்து விடும் தன்மை கொண்டது.

* படிப்பதைக் காட்டிலும் கேள்வி ஞானம் மிகவும் உயர்ந்தது.
   கேட்பதைக் காட்டிலும் நேரில் காண்பது அதைவிடச் சிறந்தது.

* இறைக்காட்சி கிடைத்த பின்பே மனிதனிடம் இருக்கும் அறியாமை முற்றிலும்  அகலும். மன வலிமை படைத்தவர்களால் மட்டுமே உலக ஆசைகளைத் துறக்க முடியும்.

* கடவுள் நமக்கு முதலாளியாக இருக்கிறார்.
   நாம் அவரது வேலைக்காரர்கள்.  அவனுக்கு பணிவிடை செய்வது தான்    பிறவிப்பயன்.

* மனிதவாழ்வின் சாரமே பக்தியாக இருப்பது தான்.
   பக்தி கொள்ளாதவர்கள் வாழும் வாழ்வில் அர்த்தமில்லை.

* நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள்.
  அதே நேரத்தில் மனதை ஆண்டவனிடம் வைத்திருங்கள்.

பிரத்யங்கிராவை வணங்க "இலை' போதும்



பஞ்சபாண்டவர்கள் காட்டில் வசித்த போது, சக்திதேவியின் சிலையைக் கண்டனர். அந்த தேவியை பூஜிக்கபூக்களைத் தேடி அலைந்தனர். பூ கிடைக்காததால், ஒரு ஆலமரத்தின் இலைகளை பூக்களாக எண்ணித் தூவி தேவியை வணங்கினர். தேவியும் அவர்களுக்கு அருள்செய்தாள். பக்திக்கு தேவை இன்ன பொருள் என்பது முக்கியமல்ல. நிஜமான பக்தியுடன் எந்தப் பொருளை காணிக்கையாக்கினாலும் அதை இறைவன் ஏற்பான் என்பதற்கு இது உதாரணம். பஞ்சபாண்டவர் வழிபாடு செய்த இந்த இடம் தற்போது "அய்யாவாடி' என்று அழைக்கப்படுகிறது. சிவனின் அம்சமான சரபேஸ்வர மூர்த்தியின் இரண்டு இறக்கைகளில் இரண்டு சக்திகள் உள்ளனர். ஒரு சக்தி சூலினி துர்க்கை. மற்றொரு சக்தி பிரத்யங்கிரா. இவளை "அதர்வண பத்ரகாளி' என்றும் அழைப்பர். எதிரிகளை ஒடுக்கி நம்மைக் காப்பவளாக விளங்கும் இவளை அமாவாசையன்று வழிபடுவது சிறப்பு. ராவணனின் பிள்ளையான மேகநாதனுக்கு, தேவர்களின் தலைவனான இந்திரனை வெல்லும் சக்தியை பிரத்யங்கிராதேவியே அளித்தாள். அய்யாவாடியில் அமாவாசை நாளில் நடைபெறும் நிகும்பலா யாகத்தில் பழங்கள், பூக்களுடன், மிளகாய் வத்தலையும் யாகத்தீயில் இடுவர். எவ்வளவு வத்தலை தீயிலிட்டாலும் நெடி தெரிவதில்லை.

யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்?

இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.

""அக்னௌ ப்ரஸ்தாகுதி: ஸம்யக் ஆதித்யம் உபதிஷ்டதி
ஆதித்யாத் ஜாயதே விருஷ்டி: வ்ருஷ் டேரன்னம் தத:ப்ரஜா:''

யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும்.