Friday, 24 February 2012

நகரத்தார் வரலாறு

மகுட (சோழ மன்னர்க்கு மணிமுடி சுடும் மரபினர்.)
தன வைசியர் (பொருள் கொடுத்துப் பலிடை (வட்டி) வாங்குபவர்) 

 
பூமி பாலர் ( மன்னர் பின்னோர்.) நாட்டுகோட்டை நகரத்தார் எனப் பெயர் பெரும் செட்டிமார்கள் ஆதியில் காஞ்சிபுரத்தில் வழ்ந்துவந்த்வர்கள்.காஞ்சிபுரத்தில் உள்ளூரிலும் உள்நாட்டிலும் வாணிகம் செய்பவர்களாகவும் மாமல்லபுரத்துத் துறைமுகத்தில் இருந்து மரக்கலம் வழியாக வெளிநாட்டு வாணிகம் செய்பவர்களாகவும் விளங்கி யிருந்த்தர்கள். அக்காலத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட தொண்டை நாடு முழுவதும் சோழ நாடாகவே இருந்தது.

கரிகால்சோழன் காலத்திற்குப் பின்னர் - அதாவது , சும்மார் 2000 ஆண்டுகட்கு முன் - வெள்வெற்கிள்ளி என்னும் மாதைக் காதலித்து மணந்தான். அவள், தன்னை மணகக் மன்னனுக்கு ஒரு நிபந்தனை விதிதாள் . அதனை அம்மன்னனும் ஏற்றான் . அதன்படி அம்மாதிற்க்குப் பிறக்கும் மைந்தனுக்குச் சோழநாட்டில் பத்தியை வழங்க வேண்டும் என்பதாகும். கருவுற்றதும் அம்மாது நாக நாற்றிக்கு சென்று விட்டாள்; ஆண் குழந்தை பிறந்து தகக் பருவம் வந்ததும் அக் குழந்தையைக் கப்பல் வாணிகம் செய்யச் சென்றிருந்த ஒருவணிகர் கூட்டத்தின் மூலம் மன்னன்பால் சேர்ப்பிக்கும்படி அனுப்பிவைத்தாள். அக்குழந்தை வந்த படகு, நாகைத் துறைமுகத்தை அடுத்துக் கடல் அலையால் மொத்துண்டு உடைத்துவிட்டது. அப்படகில் இருத்த்வர்கள் எப்படியோ, அடைந்த படகின் மரத்துண்டுகளை பிடித்துக் கொண்டு கரைசேர்ந்தனர். பீலிவளையின் மைந்தனும் அவர்களுடன் ஒரு மரத்துண்டைப் பிடித்துகொண்டு கரை சேர்ந்தான். அவனை அழைத்துவந்த வணிகர் கூட்டத்தினர் அம்மைந்தனை மன்னன்பால் சேர்ப்பித்தினர். அச்சோழனுக்கும், பீலிவளைக்கும் ஏற்படட் ஓர் உடன்பாட்டின்படி அம்மைந்தன் கழுத்தில் தொண்டைக்கொடியுடன் இருந்தான். இருந்த அவனைச் சிற்றலைகள் கரை சேர விட்டதால் அவன் பெயர் 'தொண்டைமான் இளந்திரையன்' என்றாயிற்று. மன்னனும் நிபந்தனைனக்கேற்ப்ச் சோழ நாட்டின் ஒரு பாத்தியை அவனுக்கு வழங்கினான். தொண்டைமான் ஆண்டதால் 'தொண்டை நாடு' என்று அப்பாதி, பிற்காலத்தில் பெயர் பெற்றது. தென்பெண்ணை ஆற்றுக்கு வடக்கே, திருப்ப்திக்குத் தெற்கே, கடலுக்கு மேற்கே, பவள் மலைக்குக் கிழக்கே இந்நான்கெல்லைக்குள் உட்பட்ட நாடு தொண்டை நாடாயிற்று.



வெள்வேறகிள்ளி சோழநாட்டின் வட பகுதியை இளந்திரையனுக்கு வழங்கிய பின் காஞ்சியிலிருந்து பலதுறை வாணிகம் செய்து வந்த நம் முன்னோரை அழைத்து, அவர்களை எல்லாம் சோழ நாட்டிற்கு வந்து குடியேறித் தம் வாணிகத்தை நடத்தும்படியும், அதற்கு வேண்டிய எல்லா வசதிகளையும் தான் செய்து தருவதாகவும் கூறினான். அதற்க்கேற்ப் நம்மவர்களும் காஞ்சிபுரத்தைவிட்டுப் புறப்பட்டுச் சோழ நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம், நாகபட்டினம், காரைக்கால் முதலான் நகரங்களில் குடியேறினர்

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவர்கள் ஆதலால் இவர்கள் நகரத்தார் என்று பெயர் பெற்றனர். இவர்களுள் மிகப் பெரும்பாலோர் காவிரிப்பூம்பட்டினதிலேயே வசித்து வந்தனர். அங்கு வாழ்ந்தவர்கள் உள்ளூர்களிலும், வெளியூர் சென்றும், பிற மாநிலன்க்ட்குப் பொதி மாட்டுவண்டி, பகுகளின் மூலம் வாணிகம்செயதும் பிற தேசங்களுக்கு மரக்கலங்களின் மூலம் ஏற்றுமதி இறக்குமதி வாணிகம் செய்தும் வளம் பெட்டரு விளங்கினர்.
இவர்கள் தங்கள் வாணிப் முறைகளை மிக்க ஒர்ருமயுடனும் ஒழுங்குடனும் ஆற்றி வந்தனர். பெரும்பாலும் வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் கூட்டமாகவே செல்வர். வெளியிடம் செல்வோர் சாந்து (Traders Cararan ) (சாந்து - வாணிகச் சாந்து) என்று வழங்க்ப்பெற்றனர். பிற நாடுகளில் கடல்வழி வாணிகம் செய்தோர் "மணிக்கிராமம்" (மேற்கான்டிலே கில்ட்) என்று வழங்க்ப்பெற்றனர். எல்லாம்வகை வாணிகர்களும் தங்கள் தொழில் செம்மையாய் நடைபெற ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு 'நகரம்' எனப் பெயர் (Chamber of Commerce) பெரும்

இவர்கள் தங்கள் "நகரம்" செயல்படுவதற்கு ஒரு பெரிய மாளிகை அமைத்திருந்தனர். அதற்கு இல்ச்சினையாகச் சித்திரமேழி (கலப்பை) யையும் கோடியாகச் சிலர் சிங்கத்தையும் கொண்டிருந்த்தனர். மேலும் தங்கள் நகர மாளிகையில் வெள்ளிக் கதவும் அமைந்திருந்தனர். மன்னரும்
மதிக்கப் பலவகையாலும் சிறந்து விளங்கினர். மன்னருக்கு முடி சூடும் பெருமையினையும் உரிமையையும் உடையவர்களாய் விளங்கியிருந்தனர். பல அறப்பணிகளையும் ஆற்றி, கொடைநலம் படைத்திருந்தனர். இவர்களின் கொடைச்சிற்ப்பையும், நடைச்சிர்ப்பையும், நேர்மையையும் பற்றி பல்ப்பல் பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று


"ஈட்டிய எல்லாம் இதன்பொருட்டு என்பது
காட்டுய கைவண்ணம் காட்டினார் - வேட்டோறும்
காமருதோள் சென்னி கடல்சூழ் புகார்வனிகர்
தாமரையும் சங்கும்போல் தந்து "

இப்ப்படலின் பொருள்: "பூம்புகார் நகரத்து வணிகர்கள் தங்கள் தேடிய பொருளை எல்லாம் அரன்ழ்செய்வதற்கே என்பதனைக் காடுவதர்ககவும் சங்கநிதி, பதுமநிதி வழங்குவது போலத் தங்கள் வள்ளல் தன்மையை தம் கொடையால் கட்டினார்கள். சங்கநிதி, பதுமநிதி என்பன் செல்வத்துக்க்திபதியான் குபேரனின் இரு நிதிகள்." இங்ஙனம் இவர்களின் சிறந்த வாழ்வு சும்மார் ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் காவிரிப்பூம்பட்டின்மமாகிய பூம்புகாரில் விளன்கிற்று. அதன் பிறகு, சுமார் கி. பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை அண்ட் மன்னனுக்கும் நகர்தார்களுக்கும் விரோதம் ஏற்பட்டது. அதற்கும் காரணம் பலவாறாய்ச் செல்லபடுகிறது

1.  இவர்கள் கொடைச்சிற்ப்பல் ஏற்ப்பட்ட பொறமை.

2.  இவர்கள் தங்கள் நகர மாளிகைக்கு வெள்ளிக்கதவு அமைத்தது.

3. காவிரியாறு பெருக்கெடுத்து பொழுதோ கடல் பொங்கி எழுந்த பொழுதோ மன்னன் செய்வதறியாது மயங்கி நிற்க, தங்களிடமிருந்து பழ்சுப் பொதியை அடுக்கி, வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திவிட்டாதால் தனக்குக் குறைவை ஏற்படுத்திவிட்டதாக மன்னன் கருதி, அதன் காரணமாய்க் கொண்ட வெறுப்பு


4. நேருவில் விளையடிக்கொண்டிருந்த நகரத்தார் விட்டுப் பெண் குழந்தையின் அழகில் ஈடுபட்டு, உலா வந்த வந்த மன்னன் இக்குழந்தையை எடுத்து முத்தமிட, அச்செயலை நகரத்தார் கண்டித்ததால் மன்னனுக்கு ஏற்பட்ட சினம்.

இப்படியான் பல காரணங்களால் அக்காள் மன்னனுக்கும், நகரதார்க்கும் இடையில் உண்டான மனக்கசப்பு பகை உணர்வாய் மாறிவிட்டது. அந்த நிலை நாளுக்குநாள் வளர்ந்த்தேயன்றி குறைந்து ஒரு சுமுகநிலை ஏற்பட வழி பிறக்கவில்லை. அரசனும் கடுமையாய் இருந்தான். நகரத்தாரும் தனமான் உணர்வால் பிடிவாதமாய் இருந்தனர்.


இச்செய்கை உணர்வாலும் அச்சத்தாலும் மன்னன் தங்களைத் தண்டிக்கிகுடுமென்று அஞ்சித் திக்குளித்தோ மன்னனால் தண்டிக்க்பபட்டோ மிகப்பெரும்பாலான நகரத்தார்கள் உயிர் விட்டனர், இது எவ்வளவு உண்மை எனத் துணியத் தக்க சான்றுகள் இன்று கிடைக்குமாறில்லை. அனால், ஒரு குறிப்பிட்ட தொகையினர் சோழ நாட்டை விட்டு வெளியேறிப் பாண்டிய நாடு செர்ந்த்தனர். அப்படி வந்தவர் தொகை ஐநூறு என்று துணிய முடிகிறது. நகரதர்க்கு 'ஐநூற்றுவர்' என்று பெயர் இருப்பதாலும், இவர்கள் வசித்த பகுதி ஐந்நூற்றுவப்பெருந்தெரு என்று கல்வெட்டுகள் கூறுவதாலும் முடிவு செய்வது எளிதாகவும் சரியாகவும் இருக்கிறது.

இங்ஙனம் நாடு பெயர்ந்து வந்தவர்கள் யாரும் நாட்ட்ரசன் கோட்டையில் சிலகாலம் ஒருங்கிணைந்து வாழன்ந்தனர். இது கி பி 10 ஆம் நூற்றாண்டில் என்று கணிக்க முடிகிறது. அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த வீரபாண்டியன் முதலியோரிடம் வேண்டி ஏழு கோயில்களை பேற்று அவற்ற்றை தத்தம் கொத்திரமய்க் கொண்டு அங்கு குடியேறியும் வழிபட்டும் வந்திருக்கின்றார்.


அவையாவன்
 (1) மர்த்ற்றூர்,
 (2) இளையாத்தன்குடி,
 (3) வயிரவன் கோயில்,
 (4) நேமம்,
 (5) இலுப்பைடைக்குடி,
 (6) சூரக்குடி,
 (7) வேலன்குடி ஆகியவையாகும்

ஆகவேதான் நகரதார்களை ஏழகத்தார் என்றும், ஏழுவழியினர் என்றும் வழங்கி வந்திருக்கின்றனர். கல்வெட்டுகளிலும் ஏழகத்தார் என்ற பெயரும் காணப்படுகிறது. இவர்களின் காப்புப்படைக்கு ஏழகப்படை என்ற பெயரும் காணப்படுகிறது. அந்த 'ஏழக்ப்படை' இருந்த இடம் காரைக்குடியை அடுத்த கழனிவாசலுகும். பழைய பெயர் 'ஏழகப்பெருன்தெரு' என்பதாகும். வயிரவன் கொவிலாரின் கொத்திரப்பெயர் 'ஏழக்ப்பெருந் தேருவான வீரபாண்டிய புரமுடையார்' என்பதும். இன்றும் அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு ஏழகப்பெருமள் விண்ணகரம் என்பதும் குறிப்பிட்டத் தக்கனவாகும். நகரதாருக்குப் படையுண்டா என்று சிலர் ஐயுறலாம். உண்டு, நிச்சியம் உண்டு. நாடு காக்க மன்னர் படை வைத்திருப்பர். வாணிகப் போரும் காக்க வணிகர்கள் படைவத்திருப்பர். எனவே தான, தொல்காப்பியம்,

"இடைஇரு வகையோர் அல்லது நாட்டின்
படைவகை பெற்றோர் என்மனார் புலவர்" (மரபு 77 )


எனக் குறிப்பிடுகிறது. இடை இருவகையோர் என்றால் அந்தணர் அரசர், வணிகர், வேளாளர் என்றும் நால்வகையில், தலையும் கடையும் ஆகிய அந்தணர், வேளாளர்
இருவகையையும் நீக்கிவிட்டு, அரசர் வணிகர் ஆகிய இரு இடவகையார் என்றுதானே கொள்ள வென்டும்! ஐந்நூற்றுவர் என்பது நகரதார்க்குரிய பெயர் என்பதாலன்றோ மாற்றூ ப்பெருமன் " ஐந்நூற்றிசுவரர்" என்று பெயர் பேற்று உள்ளார். நானாதேசங்கட்கும் சென்று வாணிகம் செய்பவர்கள் ஆனதால் நானாதேசிகள் என்றும் 'தேசி' என்றும் பெயர் பெறுவார். அதனாலேயே, பிள்ளையார்பட்டிப் பெருமான் தேசி விநாயகப் பிள்ளையார் என்றும், சூரைக்குடிப் பெருமாள் தேசிக்நாதர் என்றும் பெயர் பெருவாராயினர்.
சும்மார் 12 ஆம் நூற்றாண்டை ஒட்டித் திருவேட்புருடையார் பிரிவினராகிய இரநியூராகும். பிள்ளையார்பட்டியாரும் தம்முள் புள்ளி எண்ணிக்கை அதிகமாய் இருப்பதால் இலையாத்தங்க்குடிக் கோவிலிலிருந்து பிரிந்து, பாண்டியனிடம் வேண்டி, முறையே இரணியூரையும் பிள்ளையார்பட்டியையும் பேற்று அங்கு குடியேறி கோவில் அடுத்து வழிபட்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதற்குத் தக்க அசைக்க முடியாத - சான்றாய்ப் பிள்ளையார்பட்டிக் கல்வெட்டு விளங்குகிறது. காரைக்குடி ஐந்நூற்றுவப் பெருந்தெருவில் உள்ள நகரதார்க்கு விற்று விலைப்பிரன்மானம் செய்து கொடுத்த செய்தி குடவரைக் கோவிலில் உள்ள கல்வெட்டுகளால் நன்கு புலப்படுகிறது. இது சும்மார் 12 ஆம் நூற்றாண்டில் என்று அறிய முடிகிறது.
நாளாவட்டத்தில் ஒன்பது கோவில் உள்ள ஊர்களில் வசித்த் நகரத்தார்கள் வெவ்வேறு ஊர்களில் சென்று வசிக்கலாயினர். அப்படிக் குடியேறிய ஊர்கள் தொன்னூற்று ஆறு ஆகும். எனவே, தொன்னூற்றாரூர் நகைத்தார் எனப் பிற்காலத்தில் பெயர் பெற்றனர்.

அந்தத் தொன்னூர்ற்றரூரில் வாரிவயல், போய்யளுர், சிவரக்கோட்டை, ஆலங்குடி, மேலமாகாணம், கூத்தளுர், நெய்வாசல், இளையாத்தங்குடி, வயிரவம்பட்டி, நேமம், இரணியூர், குறட்டி, தட்டட்டி கம்பனூர், இலுப்பைக்குடி, மாத்தூர், கிரணிப்பட்டி, சேர்ந்தணி, எழுவன்கொட்டை, கீழக்கோட்டை ஆகிய ஊர்களில் தற்பொழுது நகரத்தார்கள் வசிக்கவில்லை

நாட்டரசன் கோட்டையைச் சேர்த்து ஊரமைத்துக் குடியேறிய நகரத்தார்கள் காவிரிப்பூம்படினத்தைப் போலவே நகர நிர்மானம். நாட்டரசன் கோட்டையைச் சேர்த்து ஊரமைத்துக் குடியேறிய நகரத்தார்கள் காவிரிப்பூம்படினத்தைப் போலவே நகர நிர்மானம்.செய்திருக்கின்றனர். ஊரின் நடுவில் பெருஞ்சதுக்கம் அமைத்து, அதில் பல திருக்கோயில்களையும் எடுத்து, அதை சுற்றி வீடுகள் கட்டிக்கொண்டிருப்பதை இன்றும் காணலாம்.

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த்து வரும் பொது தங்களுடன் உவச்சர்களையும் அழைத்து வந்து, கண்ணகித்தைய்க்குப் பீடம் அமைத்துக் கோவில் எடுத்து வழிபட்டு வந்திருக்கின்றனர். அதுவே கணணாத்தாள் - அல்லது - கண்ணனுடைய அம்மன் - கொவிலாய் இன்று விளங்குகிறது
உவச்சர்கள் பலர் இங்கிருப்பதாலும், அவர்களும் சிலர் தம் உறவினர்களாகவோ நண்பர்களாகவோ இருந்த்தாளலுமேதான் கவிச்சக்கரவர்த்தி நாட்டரன் கோட்டைக்கு வந்து தங்கியிருக்க வேண்டும். அப்படித் தங்கியிருந்த காலத்தில் மரணம் எய்தியதால் கம்பனின் பூத உடலுக்குப் பள்ளிபடைக் கோவில் (சமாதி) நட்டரசன் கோட்டையில் ஏற்ப்பட்டிருக்கிறது. அதையும் நம் நகரத்தார் குடும்பமே பரிபாலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ள தோட்டம் ஆவி. அரு. இராமநாதன் செட்டியார் கிடும்பத்தாருக்கு உரியது. கம்பன் சமாதி சோலை சூழ்ந்த அழகிய கோயிலாய் அமைந்துள்ளது. காரைக்குடி கம்பம் கழக நிறைநாள் இங்கு நடைபெறுகிறது.


காவிரிப்பூம்பட்டினத்லிருந்து வந்தவர்கலளுள் நமவர்கள் இடையில் புலால் உணவு கொண்டதாலோ வேறு காரணத்தாலோ தனித்து விடப்பெற்றனர். மற்றையோர் மதுரை வழியாக மேலும் தெற்கு நோக்கிச் சென்றனர். அவர்களுள் அரியூராரும் இங்ஙகனமே இடையில் விடப்பெற்றனர். அவார்கள் பிரான்மலையைச் சுற்றிய ஊர்களில் குடிபெறிப் பிரான்மலைக் கொடுன்குன்றிரைக் குலதேய்வமாய்க் கொண்டு வாழ்ந்து வரூவாராயினர்.
எஞ்ச்சிய. நகரத்தார்கள் நாகர்கோவில் கொட்டர்த்றறுப்ப்குதியில் குடியேறினர். காவிரிப்பூம்பட்டினத்திளிருந்து கொண்டுவந்த மரகதப் பிள்ளையாரைக் கோட்டாற்றில் பிரதிஷ்டை செய்து வழிபடுவாராயினர். அக்கோவில் உள்ள தெரு செட்டித்தெரு எனப்படடுகிறது. அங்குள்ள பிள்ளையார் பெயர் தேசிவிநாயகர் என்பதாகும் இன்றும் அக்கோவில் மிகச்சிறப்பாய் விளங்கி வரருவதை காணலாம்.


பாண்டி நாட்டிற்கு வந்த நம்மவர்கள் தொழில் நிமித்தமாய்ப் பல நாடுகட்கும், கடல் கடந்தும் சென்ற வந்தனர். தலைப்பில் நாகை, திர்நேல்வெளி, சென்னை, மதுரை முதலான தமிழ்நாடுப் பகுதிகட்கும், பின்னர் வங்காளம், கஞ்சம் முதலிய வெளி மாநிலங்கட்கும், பிறகு யாழ்ப்பாணம், கொழுப்பு முதலிய பகுதிகட்கும், அதன் பிறகு பர்மா. மலேய, சிங்கப்பூர், செய்கோன், மைடான் முதலான் இடங்கட்கும் சென்று தொழில் செய்துவந்தனர்.
முதலில் பண்டங்கள் வாங்கி விற்பத்தையே தொழிலாய்க் கொண்ட்டிருன்தனர். பின்னர், நாளாவட்டத்தில் பல்வேறு காரனம்க்களால், பணம் கொடுக்கல் வாங்கல் (Banking) தொழில் முறையில் ஈடுபட்டனர். ஆனாலும், பழைய முறைப்படியே கொண்டு விற்கப் போய்வருவதாகவே கூறி வந்தனர்.


நகரத்தார்களில் தொழில் முறையையும் முறை கணக்கெழுதும் முறையையும் நாணயத்தையும் பற்றிப் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் மட்டுமன்றி ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட பாங்கிங் எங்க்க்வோயரிக் கமிஷன் எனப் பெயரிய விசாரணைக் குழுவும் மிகச் சிரப்பாய்ப் பாராட்டியிருக்க காணலாம்.


காணிகாணியாய்த் தேடிக் கோடி கொடடியாய்த் தருமம் செய்த சமூகம் என்று நகரத்தார் சமூகத்தை நல்லோர் எல்லாம் பாராட்டுவர். மூவேந்தர் ஆட்சி முடிந்து. பிற மதத்தவர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நாம் ஏராளமான் ஆலயங்களைத் திருப்பணி செய்து ஆலயங்கள் அழியாமற் காத்தனர். ஆலயங்கள் மட்டுமல்லாம பாடசாலைகள், பசுமடங்கள், சத்திரங்கள், மருத்துவ சாலைகள் முதலியனவும் தொற்றுவித்து நலம் புரிந்து வந்தனர்.

தற்பொழுத் நகர்தார்களுடன் பலர் பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை, பல்கலைக் கழகம் போண்டர் காலத்திற்கேற்ப் அறங்க்களிரும் ஈடுபட்டுப் பயன் சுரந்து வருகின்றனர்.


மக்கள் தொகையால் சிறிய சமுகமே ஆனாலும் அறப்பநிகளால் உலகறிந்த ஒரு சமுகமாய்த் திகழ்கின்றது. நகரத்தார் சமுகம். காசி முதல் இராமேச்வேரம் வரை இவர்களின் அறப்பணி இல்லாத இடம் இல்லை என்னும்படி எல்லா இடங்களிலும் இவர்களின் நற்த்றோண்டு நாளும் மலர்ந்து மணம் பரப்பி வருகிறது.


வெளியிடங்களில் மட்டுமன்றித் தாங்கள் நிரந்தரமாய் வசிக்கும் ஊர்களிலும் சிவன்கோவில் எடுத்து அருமையாகப் புரந்து வருவது கண்கூடு. அப்படி அமைக்கப்படும் கோவில்கள் யாவும் மதுரை மரபை யொட்டி மீனாட்சி சுந்த்ரேஸ்வர் கொவில்கலாகவே இருக்கக் காணலாம்.

வாழ்க நாகரதார் சமுகம் !
வளர்க அவர்தம் அற்பணிகள் !

No comments:

Post a Comment